தேனி: கண்ணகி கோயில் செல்ல அனுமதி நேரம் குறைப்பு; கேரள அரசு கெடுபிடிகளைத் தளர்த்த பக்தர்கள் கோரிக்கை!



கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக - கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்ணகி கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை மாதப் பௌர்ணமியன்று இந்த விழா...

விரிவாக படிக்க >>

Comments