சாலையில் பற்றி எரிந்த பேட்டரி பைக் - திண்டிவனத்தில் பரபரப்பு!



விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம்கோட்டைமேடு செந்தமிழ் நகரை சேர்ந்த தேவன் மகன் ஜெயபாரதி(30). இவர் திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேட்டரி பைக்கில் வந்துள்ளார். அப்போது பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுள்ளார்.

திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து பேட்டரி பைக் தீப்பிடித்து எரிந்தது. இதில் எலக்ட்ரிக் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திண்டிவனம் அடுத்த நொளம்பூரை சேர்ந்த கெஜமுகன் என்பவரது பைக்கிலும் தீ பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் எலக்ட்ரிக்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog