நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!


நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!


தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக, திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆலைகளில் உள்ள பருத்தி மற்றும் நூல்களின் இருப்பு தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

Sarah Ferguson talks being abandoned feeling not worthy of love and self #Self

How to blend multiple exposures together in Photoshop the easy way #Photoshop