தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்!


தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்!


கன்னட நடிகை சேத்தன் ராஜ் திடீரென மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பையும், திலையுலகினரை அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. தவறான சிகிச்சைக் காரணமாக நடிகை சேத்தன் மரணமடைந்துள்ளதாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தவர் நடிகை சேத்தன் ராஜ். கன்னட திரையுலகில், நடிகை சேத்தன் ராஜூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நடிகை சேத்தன் ராஜ்  திடீரென மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் நடிகை சேத்தனா ராஜ் என்றால் தெரியாதவர்கள்  யாரும் இல்லை. இவருக்கு வயது 21. இவர் கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அனைவராலும் சிறந்த நடிகை என்ற அடையாளம் காணப்பட்டவர்.

இவர் பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் தனது உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலை கொழுப்பு நீக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் அன்று மாலையிலேயே சேத்தனாவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரின் நுரையீரலில் திடீரென நீர் தேங்கத் தொடங்கியதால் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தற்போது நடிகை சேதன்னாவின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராமையா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நடிகை சேத்தனாவின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.


சேத்தனா பெற்றோருக்கு தெரியாமலேயே மருத்துவமனையில் சேர்ந்து பிளாஸ்டிக் சிகிச்சை பெற்றார் என்று கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் சேத்தனாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது மகள் மரணத்திற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என்று நடிகையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை சேத்தனா மரணம் குறித்து தகவல் அறிந்த கன்னட திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

நடிகைகள் பொதுவாக உடல் பருமனாக இருந்தால் எடையை குறைத்து கொழுப்பு அளவை குறைப்பதற்கும், மாநிறமாக உள்ள உடல்தோற்றத்தை மாம்பழ நிறத்தில் மாற்றிக்கொள்வதற்கும் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது வழக்கம். அது சில சமயங்களில் கைகொடுத்தாலும் அதிபயங்கரமான  பக்கவிளைவுகளை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Comments

Popular posts from this blog