தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..!320230202
தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் ப்ரீ பயர் விளையாடி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மகனிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அவரது தாய் யுவராணி தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். கால் ஆண்டு தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவன் மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா புகைக்க தொடங்கியதால் சிறுவனை தாய் கண்டித்துள்ளார். இதனால் சைக்கோ போல கத்திய அந்த சிறுவன் தாயுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளான். சம்பவத்தன்று இரவு வீட்டில் யுவராணி, தனது மக